28 March 2009

படித்ததில் பிடித்தது


தாவோ தேஜிங்
லாலோ ட்சு
தமிழில்: சி.மணி


அழகாயிருப்பது ஆழகு என்று
எல்லோரும் புரிந்துகொண்டால்
விகாரம் தோன்றுகிறது.
நன்மையை நன்மை என்று
எல்லோரும் புரிந்துகொண்டால்
தீமை தோன்றுகிறது.

எனவே, இருத்தல்
இருத்தலின்மையைச் சுட்டிக்காட்டுகிறது
எளிமை
கடினத்தைத் தோற்றுவிக்கிறது.
நீட்டத்திலிருந்து
குறுக்கத்தைப் பெறுகிறோம்,
அளவை வைத்து;
உயரத்திலிருந்து
பள்ளத்தை வேறுபடுத்துகிறோம்,
இடத்தை வைத்து;
ஒலியதிர்வு
ஒலியை இசைவுபடுத்துகிறது;
இவ்வாறு,பின்னது
முன்னதைத் தொடர்கிறது.

எனவே, ஞானி
தன் பணியைத் தொடர்கிறான்
செயல்படாமையை மேற்கொண்டு;
எனவே, அவன் தன் போதனைகளைப்
போதிக்கிறான், சொற்கள் இல்லாமல்.

(க்ரியா பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘தாவோ தேஜிங்' புத்தகத்தில் இருந்து. புகைப்படம்: இயான் லாக்வுட்)